தினமும் காலையில் நாட்குறிப்பு எழுதுவது முந்தைய நாள் அனுபவங்களை தொகுத்துக் கொள்வது அவசியமான ஒன்று. இதற்கு ஒரு மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை ஒதுக்கலாம். முந்தைய நாள் செய்த வேலைகள் அனைத்தையும் பட்டியல் இட்டு அவை பற்றிய விபரங்களையும், மதிப்பீடுகளையும் எழுதி தொகுத்துக் கொள்ள வேண்டும். அப்படி தொகுத்துக் கொள்வது தனிப்பட்ட முன் முடிவுகளை ஏற்படுத்திக் கொண்டு கெட்டி தட்டிப் போன்ற மனநிலைக்கு இட்டுச் செல்லும் என்பது இதில் இருக்கும் அபாயம். கடந்த 3-4 ஆண்டுகளில் கற்றுக் கொண்ட இயக்கவியல் பொருள்முதல்வாத சிந்தனை முறையை கறாராக கடைப்பிடிப்பதன் மூலம் அந்த அபாயத்தை தவிர்க்க தொடர்ந்து முயற்சிக்க வேண்டும், போராட வேண்டும்.
இரண்டாவதாக, தினமும் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். காலையில் நடைப் பயிற்சி போனதால் ரத்து, தாமதமாக எழுந்ததால் ரத்து, உடல் வலியாக இருப்பதால் ரத்து, சளி பிடித்திருப்பதால் ரத்து என்று எந்த ஒரு காரணம் கிடைத்தாலும் உடற்பயிற்சி செய்வதை தவற விடக் கூடாது. அவற்றையும் மீறி செய்ய வேண்டும். இதற்கு இரண்டு தேவைகள் இருக்கின்றன. ஒன்று, பகலில் தூக்கம் வருவது, படுத்து தூங்க வேண்டும் என்ற தேவையை உடல்ரீதியாக சரி செய்து கொள்வது. அதாவது, உடற் பயிற்சி, மூச்சு பயிற்சி மூலம் உடலின் ஆக்சிஜன் பயன்பாடு ஒழுங்குபடுத்தப்பட்டு மூளையை சுறுப்பாக வைத்திருக்க உதவுவது. இரண்டாவது, இந்த 20 நிமிடங்களில் மனதின் எண்ண ஓட்டங்களை முறைப்படுத்தி, ஆற்றுப்படுத்தி சிந்தனை அலை பாய்வதை தடுப்பது.
மூன்றாவதாக, வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும். கடையில் சாப்பிடுவதால் செலவு, போதுமான ஊட்டச் சத்து கிடைக்காமல் உடல்நல குறைபாடு, அதனால் அதிக செலவு என்ற நச்சு சுழற்சியை சரி செய்ய வேண்டும். என்ன சமைக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று முறையாக திட்டமிட்டு அதற்கான பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும். மேலும், சமைக்கும் போது ஒருவர் ஒரு நேரத்துக்கு சாப்பிடும் அளவில் சமைக்கும் மனநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சமைப்பது சமைக்கிறோம், அதிகமாக சமைத்து விடுவோம் என்ற 'சிக்கன' போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அந்த 'சிக்கன' போக்கு உணவுப் பொருள் வீணாவதிலும், அதைத் தடுப்பதற்கு அளவுக்கதிகமாக சாப்பிடுவதிலும், அதைத் தடுப்பதற்கு சமையலையே நிறுத்துவதிலும் கொண்டு விடுகிறது. இதை உடைக்க அரை கப் சோறு, ஒரு கப் கோதுமை மாவு, அரை கப் உப்புமாவுக்கு என்று அளவை பாதியாக குறைத்து சமைக்க வேண்டும்.
நான்காவதாக, தினமும் எழுதுவதையும் படிப்பதையும் எடிட் செய்வதையும் திட்டமிட்டு குறிப்பிட்ட நேரத்துக்கு, குறிப்பிட்ட கால அளவுக்கு செய்ய வேண்டும். ஒரு புத்தகத்தை படிக்க எடுத்துக் கொண்டால் அதை முடித்து விட்டுத்தான் அடுத்த புத்தகத்தையோ, ஒரு நீளமான கட்டுரையையோ படிக்க ஆரம்பிக்க வேண்டும். உபரி மதிப்பு கோட்பாடுகள் என்ற நூலை எடுத்துக் கொண்டால் அதன் 3 பாகங்களையும் முடிப்பது வரை வேறு நூல்களையோ, முக்கியமான கோட்பாட்டு கட்டுரைகளையோ படிக்க ஆரம்பிக்கக் கூடாது. ஒரு நூலை படிக்க ஆரம்பிக்கும் போது அதன் அளவு, அதற்கு தேவைப்படப் போகும் நேரம் இவற்றை கருத்தில் கொள்வது என்று ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். அவ்வளவு நேரம் ஒதுக்க முடியாது என்றால் அந்த நூலை ஆரம்பிக்கக் கூடாது. வேறு நூலை அதே போல திட்டமிட்டு படிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்படி திட்டமிட்டு படித்த ஒவ்வொரு நூல், பார்த்த ஒவ்வொரு திரைப்படம், கட்டுரை பற்றியும் விமர்சன பூர்வமாக எழுத வேண்டும். அதை தினமும் நாட்குறிப்புக்கு ஒதுக்கிய நேரத்திலோ அதற்கு பிறகு தனியாக நேரம் ஒதுக்கியோ செய்ய வேண்டும்.
ஐந்தாவதாக, காட்சி ஊடகத்தையும், செய்திகளையும், சமூக ஊடக தகவல்களையும் படிப்பதை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். காட்சி ஊடகம், செய்தி, சமூக ஊடகம் மேய்வதற்கு என்று தினமும் கறாராக 1 மணி நேரம் மட்டும் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். செய்தித் தாள் வாசிப்பது, இணையத்தில் செய்தி வாசிப்பது, யூடியூப் வீடியோக்கள் பார்ப்பது, ஃபேஸ்புக் டிரெண்ட் அவதானிப்பது இவை அனைத்தும் சேர்த்து 1 மணி நேரம்தான். மற்றபடி, குறிப்பாக தேவையின் அடிப்படையில் அந்த தேவையைச் சுற்றி தேவைப்படும் நேரம் ஒதுக்கி திரைப்படம் பார்க்கவோ, யூடியூப் வீடியோ பார்ப்பதையோ, ஃபேஸ்புக்கில் ஆய்வு செய்வதையோ, இணையத்தில் செய்தி படிப்பதையோ செய்யலாம். அது மேலே சொன்ன வாசிப்பு திட்டத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
ஆறாவதாக, தினமும் ஒரு மொழிபெயர்ப்புக்கு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். 1000 வார்த்தைகள் மொழிபெயர்ப்பு என்று வைத்துக் கொள்ளலாம்.
ஏழாவதாக, தினமும் புதிதாக எழுதுவதற்கு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். 2000 வார்த்தைகள் எழுத்து என்று வைத்துக் கொள்ளலாம்.
எட்டாவதாக, காலையில் நாட்குறிப்பு எழுதி முடிக்கும் வரை வேறு விஷயங்களை படிக்கக் கூடாது. உடற்பயிற்சி செய்து முடிப்பது வரை எதையும் சாப்பிடக் கூடாது. காலையில் கஷ்டமாக இருக்கிறது என்றால் இரவு தூங்கப் போவதற்கு முன்பு நாட்குறிப்பில் கணிசமான பகுதிகளை எழுதி விடலாம். இரவில் முறையாக சாப்பிட்டு விட்டு தூங்கலாம்.
பேசுவதை சரி செய்து கொள்வது எப்படி?
சாராம்சமான கருத்தில் ஊன்றி நிற்பது என்பது சரியானது. அதை ஒட்டி பேசும் போது கிளைத்துச் சென்று வேறு ஒரு விஷயத்துக்குள் போய் விளக்குவது தவறானது.
இது பேசும் போதும், எழுதும் போதும், வகுப்பு நடத்தும் போதும், கருத்து சொல்லும் போதும் என்ற சிந்தனை ஓட்டம் தொடர்பான பிரச்சனை. இயல்பாக எல்லா விஷயங்களும் இணைந்திருக்கின்றன, ஒன்றைப் பற்றி பேசும் போது அதனோடு தொடர்புடைய மற்ற விஷயங்களையும் பேசுவது சாத்தியமாகிறது என்பது உண்மை. ஆனால், ஒரு விஷயத்தை பேசும் போது அதன் மீது கவனத்தை குவித்து, பிற விஷயங்களிலிருந்து abstract செய்து கொள்ளும் ஒழுங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். பேசும் விஷயத்தின் மீது கவனத்தைக் குவித்து ஆழமாக பரிசீலிப்பதற்கும், கேட்பவர்களின் கவனத்தை ஈர்த்து சொல்லும் விஷயத்தை உறுதியாக கொண்டு சேர்ப்பதற்கும் இது அவசியமாக உள்ளது. இதை நாட்குறிப்பு எழுதும் போதும் சரி, மொழிபெயர்ப்பு செய்யும் போதும் சரி, படைப்பு ரீதியான எழுத்தின் போதும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
இரண்டாவதாக, தினமும் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். காலையில் நடைப் பயிற்சி போனதால் ரத்து, தாமதமாக எழுந்ததால் ரத்து, உடல் வலியாக இருப்பதால் ரத்து, சளி பிடித்திருப்பதால் ரத்து என்று எந்த ஒரு காரணம் கிடைத்தாலும் உடற்பயிற்சி செய்வதை தவற விடக் கூடாது. அவற்றையும் மீறி செய்ய வேண்டும். இதற்கு இரண்டு தேவைகள் இருக்கின்றன. ஒன்று, பகலில் தூக்கம் வருவது, படுத்து தூங்க வேண்டும் என்ற தேவையை உடல்ரீதியாக சரி செய்து கொள்வது. அதாவது, உடற் பயிற்சி, மூச்சு பயிற்சி மூலம் உடலின் ஆக்சிஜன் பயன்பாடு ஒழுங்குபடுத்தப்பட்டு மூளையை சுறுப்பாக வைத்திருக்க உதவுவது. இரண்டாவது, இந்த 20 நிமிடங்களில் மனதின் எண்ண ஓட்டங்களை முறைப்படுத்தி, ஆற்றுப்படுத்தி சிந்தனை அலை பாய்வதை தடுப்பது.
மூன்றாவதாக, வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும். கடையில் சாப்பிடுவதால் செலவு, போதுமான ஊட்டச் சத்து கிடைக்காமல் உடல்நல குறைபாடு, அதனால் அதிக செலவு என்ற நச்சு சுழற்சியை சரி செய்ய வேண்டும். என்ன சமைக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று முறையாக திட்டமிட்டு அதற்கான பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும். மேலும், சமைக்கும் போது ஒருவர் ஒரு நேரத்துக்கு சாப்பிடும் அளவில் சமைக்கும் மனநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சமைப்பது சமைக்கிறோம், அதிகமாக சமைத்து விடுவோம் என்ற 'சிக்கன' போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அந்த 'சிக்கன' போக்கு உணவுப் பொருள் வீணாவதிலும், அதைத் தடுப்பதற்கு அளவுக்கதிகமாக சாப்பிடுவதிலும், அதைத் தடுப்பதற்கு சமையலையே நிறுத்துவதிலும் கொண்டு விடுகிறது. இதை உடைக்க அரை கப் சோறு, ஒரு கப் கோதுமை மாவு, அரை கப் உப்புமாவுக்கு என்று அளவை பாதியாக குறைத்து சமைக்க வேண்டும்.
நான்காவதாக, தினமும் எழுதுவதையும் படிப்பதையும் எடிட் செய்வதையும் திட்டமிட்டு குறிப்பிட்ட நேரத்துக்கு, குறிப்பிட்ட கால அளவுக்கு செய்ய வேண்டும். ஒரு புத்தகத்தை படிக்க எடுத்துக் கொண்டால் அதை முடித்து விட்டுத்தான் அடுத்த புத்தகத்தையோ, ஒரு நீளமான கட்டுரையையோ படிக்க ஆரம்பிக்க வேண்டும். உபரி மதிப்பு கோட்பாடுகள் என்ற நூலை எடுத்துக் கொண்டால் அதன் 3 பாகங்களையும் முடிப்பது வரை வேறு நூல்களையோ, முக்கியமான கோட்பாட்டு கட்டுரைகளையோ படிக்க ஆரம்பிக்கக் கூடாது. ஒரு நூலை படிக்க ஆரம்பிக்கும் போது அதன் அளவு, அதற்கு தேவைப்படப் போகும் நேரம் இவற்றை கருத்தில் கொள்வது என்று ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். அவ்வளவு நேரம் ஒதுக்க முடியாது என்றால் அந்த நூலை ஆரம்பிக்கக் கூடாது. வேறு நூலை அதே போல திட்டமிட்டு படிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்படி திட்டமிட்டு படித்த ஒவ்வொரு நூல், பார்த்த ஒவ்வொரு திரைப்படம், கட்டுரை பற்றியும் விமர்சன பூர்வமாக எழுத வேண்டும். அதை தினமும் நாட்குறிப்புக்கு ஒதுக்கிய நேரத்திலோ அதற்கு பிறகு தனியாக நேரம் ஒதுக்கியோ செய்ய வேண்டும்.
ஐந்தாவதாக, காட்சி ஊடகத்தையும், செய்திகளையும், சமூக ஊடக தகவல்களையும் படிப்பதை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். காட்சி ஊடகம், செய்தி, சமூக ஊடகம் மேய்வதற்கு என்று தினமும் கறாராக 1 மணி நேரம் மட்டும் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். செய்தித் தாள் வாசிப்பது, இணையத்தில் செய்தி வாசிப்பது, யூடியூப் வீடியோக்கள் பார்ப்பது, ஃபேஸ்புக் டிரெண்ட் அவதானிப்பது இவை அனைத்தும் சேர்த்து 1 மணி நேரம்தான். மற்றபடி, குறிப்பாக தேவையின் அடிப்படையில் அந்த தேவையைச் சுற்றி தேவைப்படும் நேரம் ஒதுக்கி திரைப்படம் பார்க்கவோ, யூடியூப் வீடியோ பார்ப்பதையோ, ஃபேஸ்புக்கில் ஆய்வு செய்வதையோ, இணையத்தில் செய்தி படிப்பதையோ செய்யலாம். அது மேலே சொன்ன வாசிப்பு திட்டத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
ஆறாவதாக, தினமும் ஒரு மொழிபெயர்ப்புக்கு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். 1000 வார்த்தைகள் மொழிபெயர்ப்பு என்று வைத்துக் கொள்ளலாம்.
ஏழாவதாக, தினமும் புதிதாக எழுதுவதற்கு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். 2000 வார்த்தைகள் எழுத்து என்று வைத்துக் கொள்ளலாம்.
எட்டாவதாக, காலையில் நாட்குறிப்பு எழுதி முடிக்கும் வரை வேறு விஷயங்களை படிக்கக் கூடாது. உடற்பயிற்சி செய்து முடிப்பது வரை எதையும் சாப்பிடக் கூடாது. காலையில் கஷ்டமாக இருக்கிறது என்றால் இரவு தூங்கப் போவதற்கு முன்பு நாட்குறிப்பில் கணிசமான பகுதிகளை எழுதி விடலாம். இரவில் முறையாக சாப்பிட்டு விட்டு தூங்கலாம்.
பேசுவதை சரி செய்து கொள்வது எப்படி?
சாராம்சமான கருத்தில் ஊன்றி நிற்பது என்பது சரியானது. அதை ஒட்டி பேசும் போது கிளைத்துச் சென்று வேறு ஒரு விஷயத்துக்குள் போய் விளக்குவது தவறானது.
இது பேசும் போதும், எழுதும் போதும், வகுப்பு நடத்தும் போதும், கருத்து சொல்லும் போதும் என்ற சிந்தனை ஓட்டம் தொடர்பான பிரச்சனை. இயல்பாக எல்லா விஷயங்களும் இணைந்திருக்கின்றன, ஒன்றைப் பற்றி பேசும் போது அதனோடு தொடர்புடைய மற்ற விஷயங்களையும் பேசுவது சாத்தியமாகிறது என்பது உண்மை. ஆனால், ஒரு விஷயத்தை பேசும் போது அதன் மீது கவனத்தை குவித்து, பிற விஷயங்களிலிருந்து abstract செய்து கொள்ளும் ஒழுங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். பேசும் விஷயத்தின் மீது கவனத்தைக் குவித்து ஆழமாக பரிசீலிப்பதற்கும், கேட்பவர்களின் கவனத்தை ஈர்த்து சொல்லும் விஷயத்தை உறுதியாக கொண்டு சேர்ப்பதற்கும் இது அவசியமாக உள்ளது. இதை நாட்குறிப்பு எழுதும் போதும் சரி, மொழிபெயர்ப்பு செய்யும் போதும் சரி, படைப்பு ரீதியான எழுத்தின் போதும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.